ஈழம்

ஈழம்

வியாழன், 30 ஜூன், 2011

எழுந்து பார் நாளை மலரும் ஈழம்!

மண்ணை மண்ணை தாயக மண்ணை 
மீட்க வந்தோம் நண்பா ! 
உன்னை உன்னை காக்க உலகில்
பிறந்தோம், நண்பா !

அன்னை அன்னை தாயக அன்னை 
ஆழ நின்றோம் நண்பா ! 
இல்லை இல்லை நீக்கவில்லை 
சொல்லி அடித்தோம் நண்பா !

தாயகத்தின் விழி இன்னும் தூங்கவில்லை ! 
தமிழீழத்தின் விதி இன்னும் மாறவில்லை !
தரணியெல்லம் போற்றிடுவோம்
தாகத்தில் நீ தமிழனாய் நின்று
தாயத்தமிழீழம் நமதென்று
பறை சாற்றிடுவோம், நண்பா !

காயத்தின் வலி இன்னும் மறையவில்லை ! 
களத்தின் வழி இன்னும் திறக்கவில்லை !
காலமெல்லாம் மாற்றிடுவோம்
கண்ணீரில் நீ இரத்தமாய் வென்று
தாய்த்தமிழீழம் நமதென்று
மலரச் செய்திடுவோம் நண்பா !

நன்றி இளம்கவி சானியா

Image Hosted by ImageShack.us




இத்தளத்தின் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற தங்கள் மின்னஞ்சல் முகவரி கீழே பதிவு செய்யவும்

Image Hosted by ImageShack.us