ஈழம்

ஈழம்

புதன், 27 ஜூலை, 2011

நிமிர்ந்து நில்லடா தமிழா!!!


உயர்ந்து கொள்ளடா தமிழா!
உரிமை காத்திட அணியில் சேர்ந்திடு
உழைக்க வேண்டும் நாம் தமிழா - ஈழம்
மீட்க வேண்டும் புறப்படடா!  -(நிமிர்ந்து நில்லடா தமிழா ....)


நிமிர்ந்து நில்லடா தமிழா - நிலை
உயர்ந்து கொள்ளடா தமிழா!
உரிமை காக்கவும் உண்மை பேணவும்
ஒன்று சேரடா தமிழா - உறவுகள்
காக்க வேண்டும் புறப்படடா!  --(நிமிர்ந்து நில்லடா தமிழா ....)

முள்ளி வாய்க்காலில் முடிந்து போன கதை
தொடர வேண்டுமா தமிழா - அதை
முடிக்க வேண்டாமா தமிழா!
கொன்று குவித்தவரும் கொலைகள் செய்தவரும்
நின்று வாழ்வதில்லை தமிழா - நீதி
செத்துப் போவதில்லை தமிழா!  -(நிமிர்ந்து நில்லடா தமிழா ....)

கடவுள் வந்தாலும் கருணை தந்தாலும்
எழும்பி வருவரா தமிழா - சென்ற
உயிரும் திரும்புமா தமிழா!
புத்தன் வழிவந்த போலிக் கும்பல்கள்
கொட்டம் அடக்கணும் தமிழா- அவர்களைக்
கூண்டில் ஏத்தணும் தமிழா!  -(நிமிர்ந்து நில்லடா தமிழா ....)

மடிந்து போனகதை முடிந்து போனவதை
மறக்க வேண்டுமே தமிழா - மனம்
தெளிய வைத்திடு தமிழா!
விடியல் நோக்கியே விளக்கை ஏந்தியே
வாழ்ந்து காட்டுவோம் தமிழா- நாளை
வென்று காட்டுவோம் தமிழா!  -(நிமிர்ந்து நில்லடா தமிழா ....)

நாடு கடந்த ஒரு அமைப்பு இருக்கு தின்று
தேடி வந்து ஒன்று சேரு - ஓர்
அணியில் நின்று நீ பாரு
கேடு கேட்டவரின் நேர்மை யற்ற செயல்
உலக அரங்கிலே கூறு - தமிழா!
நீதி கேட்டு அங்கு கூடு!  -(நிமிர்ந்து நில்லடா தமிழா ....)

நிமிர்ந்து நில்லடா தமிழா - நிலை
உயர்ந்து கொள்ளடா தமிழா!
உரிமை காத்திட அணியில் சேர்ந்திடு
உழைக்க வேண்டும் நாம் தமிழா - ஈழம்
மீட்க வேண்டும் புறப்படடா!  -(நிமிர்ந்து நில்லடா தமிழா ....)



வீழ்வது தோல்வி அல்ல!!! 
வீழ்ந்து கிடப்பதே தோல்வி!!! 

Image Hosted by ImageShack.us

இத்தளத்தின் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற தங்கள் மின்னஞ்சல் முகவரி கீழே பதிவு செய்யவும்

Image Hosted by ImageShack.us