ஈழம்

ஈழம்

ஞாயிறு, 23 டிசம்பர், 2012

போர்க்குணமே சாவதில்லை...


கலங்கி நின்ற ஈழத்தின்
கலங்கரை விளக்கானீர்கள்
விலங்குடைத்து வாழ்வதொரு
விதியாகிப் போனீர்கள்

கண்ணீரை துடைத்திடவே
கரும்புலியாய் உயிர்தந்தீர்
சென்னீரை வார்த்தெடுத்தே
செங்களத்தில் பயிர் வளர்த்தீர்

உருக்குலைந்த தேசத்தை
உருவமாக்கி வைத்தீர்கள்
மெருகழிந்த வாழ்வதனில்
மேன்மைதனை சேர்த்தீர்கள்

வைய்யமிது வரையிலுமே
கண்டிராத கரும்புலிகாள்
பொய்யெனவே போவதில்லை – உம்
போர்க்குணமும் சாவதில்லை

விதியினை மாற்ற வேண்டி
வெடிகளுக்குள் உடல் புதைத்தீர்
எதிரியின் எல்லை தாண்டி
எங்குமவன் உடல் சிதைத்தீர்

உடல்தனையே நெருப்பாக்கி
உயிராயுதம் படைத்தீர்கள்
கடலடியில் இடியாகி
கப்பல்களை தகர்த்தீர்கள்

எங்கு சென்றீர் எங்கு சென்றீர்
எம் குலத்தின் ஒளியானீர்
எங்கு சென்றீர் எங்கு சென்றீர்
எதிர்கால வழியானீர்…வாழ்வானீர்

வைய்யமிது வரையிலுமே
கண்டிராத கரும்புலிகாள்
பொய்யெனவே போவதில்லை – உம்
போர்க்குணமும் சாவதில்லை



நிலவரசு கண்ணன்

பேஸ் புக்கில் உங்கள் விருப்பத்தை தெரிவித்து எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள் உறவுகளே.

இத்தளத்தின் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற தங்கள் மின்னஞ்சல் முகவரி கீழே பதிவு செய்யவும்

Image Hosted by ImageShack.us