ஈழம்

ஈழம்

திங்கள், 10 ஜூன், 2013

தலைவர் பிரபாகரன் கண்ட உலக சாம்ராஜ்ஜியம் ஒரு பார்வை.

மகா அலெக்சாண்டரும், நெப்போலியனும் தொடாத சிகரங்களைத் தொட்டவன் தலைவன் பிரபாகரன்…

பிரபாகரன் எங்கே.. என்ற கேள்விக்கு அவர் இருக்கிறார்… இல்லை.. என்ற இரண்டு கருத்துக்களையும் ஒரே நேரத்தில் பரப்பியது யார்..

மேலை நாடுகளா.. இல்லை இந்தியாவா.. தமிழர்கள் இதுவரை விடை காணவில்லை.. தேடவும் இல்லை..

ஆனால் ஒரு விளக்கு மெல்ல மெல்ல முள்ளிவாய்க்காலின் புதர்களுக்குள் ஒளியை வீசியபடி முன்னேறிக் கொண்டிருக்கிறது..

இப்போது அந்த விளக்கு பிரபாகரனின் மகன் பாலச்சந்திரனின் முகத்தில் ஒளியடிப்பது வரை முன்னேறியிருக்கிறது.. அது மேலும் நகரும்..

ஏனென்றால் அந்த விளக்கைக் கையில் வைத்திருப்பவன் வேறு யாருமல்ல..

விடுதலைப் போராட்டத்தின் கடைசி நேரத் தலைவிதியை நிர்ணயித்தவன் அவனே.. அவன் தனது அடுத்தகட்ட நோக்கத்திற்காக விளக்கை கச்சிதமாக நகர்த்திச் செல்கிறான்..

இந்த மர்மக்கதைகளால் நமக்கு ஆகப்போவது எதுவும் இல்லை..

ஆனால் ஒரு கேள்வி…

இவ்வளவுக்குப் பிறகும் சிங்கள இனவாத அரசு மாறியதா.. இல்லை.. தமிழரின் குடியிருப்புக் காணிகளையே கொள்ளையிட அது முன்னேறிக் கொண்டிருக்கிறது..

இந்தியன் மாறியிருக்கிறானா.. இல்லை.. முன்னைய காலத்தைவிட அவன் மேலும் மேலும் தனது இதயத்தை இரும்பாக்கிச் செல்கிறான்..

ஏன்..

தீமையைச் செய்யும்வரைதான் வில்லனுக்கு வாழ்வு.. ஆகவே அவன் அதைத் தொடர்ந்தபடி முன்னேறுகிறான்.

இந்தியா – சிறீலங்கா இரண்டும் ஈழத் தமிழர்கள் மீதான பழிவாங்கலை மேலும் மேலும் இறுக்கிச் செல்வதன் காரணம் இதுதான்… இது மேலும் தொடரும்..

இது நின்றால் இருவரும் இறந்து கிடக்கும் காட்சியை இயல்பாகக் காணலாம்..

இது எதிரியின் கையில் இருக்கும் விளக்கின் கதை.

விளக்கு எதிரியின் கைகளில் மட்டுமா இருக்கிறது.. இல்லை நமது கையிலும் இருக்கிறது..

கடந்த நான்கு ஆண்டுகளாக முள்ளிவாய்க்காலில் என்ன நடந்ததென பூச்சாண்டி காட்டுவதற்காக வீசப்படும் எதிரியின் விளக்குப் பக்கமாகவே நமது விளக்குகளையும் அடித்துக் கொண்டிருக்கிறோம்.

அதனால் நமது அறிவியல் விளக்கு வெளிச்சமின்றிக் கிடக்கிறது.. இனியாவது அதைக் கொஞ்சம் எதிர்ப்பக்கமாக திசை திருப்ப வேண்டும்..

ஏனென்றால் தலைவர் பிரபாகரனின் வெற்றியை அடையாளம் காண்பதற்கு அந்தத் திருப்புகை அவசியம்.

அப்படித் திருப்பினால் பின்வரும் உண்மைகளை நீங்கள் காண்பீர்கள்..

உலகம் போற்றும் மாபெரும் வீரன் மகா அலெக்சாண்டர் ஏற்படுத்திய சாம்ராஜ்ஜியம் இப்போது எங்கே..?

அவனுக்கு அடுத்து உலகத்தின் பெரிய வீரன் நெப்போலியன் என்கிறார்கள்.. அவன் கைப்பற்றிய நிலங்கள் எல்லாம் எங்கே..?

எதுவுமே இல்லை.. அவர்கள் விட்ட பிழை என்ன.. அவர்கள் பிடித்த நிலங்களில் அவர்களுடைய மக்கள் வாழவில்லை..

பிரபாகரனும் மகா அலெக்சாண்டர், நெப்போலியன் போன்ற வீரன்தான்.. ஆனால் அவர்களால் சாதிக்க முடியாத ஒரு வெற்றியை தலைவர் பிரபாகரன் சாதித்திருக்கிறார்.

தலைவர் பிரபாகரனின் சாம்ராஜ்ஜியம் இன்று உலகம் முழுவதும் வியாபித்து, அழிக்க முடியாத பேரரசாக பொன்னொளி வீசி விளங்குகிறது.

தமிழீழம் என்ற போராட்டத்தை உலகத்திற்குக் காட்டி, மறுபுறம் உலகத்தையே தனது இனத்தின் தாயகமாக்கியிருக்கிறார் தலைவர் பிரபாகரன்.

தனது இனத்திற்காக தனித்தனி நாடுகளை உருவாக்கிய வீரர்களையே இதுவரை எழுதிய வரலாறுகள் பேசுகின்றன.

ஆனால்..

உலகத்தையே தனது இனத்திற்கான நாடாக்கிய வீரன் எங்காவது இருக்கிறானா என்று தேடுவீர்களானால் ஒரேயொருவன் மட்டும் இருப்பான் அவன் வேறு யாருமல்ல வேலுப்பிள்ளை பிரபாகரன்தான்..

கனடா, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் என்று வசதி மிக்க உலக நாடுகள் எல்லாம் இன்று ஈழத் தமிழனின் நாடுகளாகிவிட்டன.

வாழ்க்கைத்தரத்தில் அவன் ஆசியக் கண்டத்தின் அளவுகளை எல்லாம் பல மடங்கு தாண்டிவிட்டான்.

கல்வி அறிவில் தொட முடியாத சிகரங்களை எல்லாம் தொட்டுவிட்டான்.

மகா அலெக்சாண்டரும், நெப்போலியனும் கட்டிய சாம்ராஜ்ஜியங்கள் அவர்கள் மக்களால் வாழப்படாத காரணத்தால் அழிந்தே போயின..

ஆனால் பிரபாகரன் கண்ட உலக சாம்ராஜ்ஜியமோ அவன் மக்களால் வாழப்படுவதனால் அழியாத பேரரசாக உலகப்பந்தில் உருவாகிவிட்டது.

” யாதும் ஊரே யாவரும் கேளிர் ” என்றான் கணியன் பூங்குன்றன்.. அதுவே எமது வாழ்க்கையின் இறுதி இலக்கு என்றான் ஆதித் தமிழன்..

இன்று உலகின் பணக்கார நாடுகளில் உள்ள எல்லா ஊர்களிலும் ஈழத் தமிழன் வாழ்கிறான்..

யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற இலக்கை அவன் எட்டியும் தொட்டுவிட்டான்..

இந்த உன்னதத்திற்குள் தன் இனத்தை உந்தி நகர்த்தியவன் யார்..?

அவன்தான் :


           
உலகத்தின் ஈடு இணையில்லாத ஒரேயொரு வீரன் எங்கள் தலைவன் பிரபாகரன் தான்..

தமிழன் வாழும் மட்டும் அவனுக்கில்லை மரணம்.. ஏனென்றால்

தமிழன்தான் பிரபாகரன்…!

பிரபாகரன்தான் தமிழன்...!

தமிழா கோழை போல அழாதே.. மகிழ்ச்சி கொள்..! எழுச்சி கொள்..! உனக்காக உலக சாம்ராஜ்யத்தை உருவாக்கியிருக்கிறான் எங்கள் தலைவன் பிரபாகரன்..

விளக்கை மாற்றி வீசு.. உன் பெருமையை உணர்ந்து கொள்.. மற்றவை பின்னர்..

பேஸ் புக்கில் உங்கள் விருப்பத்தை தெரிவித்து எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள் உறவுகளே.

இத்தளத்தின் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற தங்கள் மின்னஞ்சல் முகவரி கீழே பதிவு செய்யவும்

Image Hosted by ImageShack.us