ஈழம்

ஈழம்

சனி, 19 பிப்ரவரி, 2011

தமிழீழத்தின் அன்னை இன்று இறைவனடி சேர்ந்தார்

தமிழீழ தேசியத்தலைவரின் தாயார் பார்வதிப்பிள்ளை (பார்வதியம்மா) இன்று யாழ் வல்வெட்டித்துறை மருத்துவமனையில் காலை 6 மணியளவில் இறைவனடி சேர்ந்தார் என்பதை மிக வருத்ததோடு உங்களுக்கு தெரிவிக்கின்றோம்.

வன்னியில் போர் தொடங்குவதற்கு முன்பே  இவருடைய உடல் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

எங்கள் ஈழத்தின் அன்னை 81 அகவையில் விண்ணுலகத்தை அடைந்தார்.
  
இப்புனிததாய் போர் முடிந்த
பிறகு மலேசியா சென்று  சிகிச்சை பெற்று வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தனது மேலதிக சிக்கிச்சைக்காக இந்தியா வந்த அவரை சிகிச்சை அளிக்க அனுமதி மறுத்து வந்த விமானத்திலேயே திருப்பி அனுப்பபட்டார்.


பின்னர் இந்திய அரசு அவருக்கு நிபந்தனையின் அடிப்படையிலேயே கிகிச்சையளிக்க முன்வந்த போதில் அவரது குடும்பத்தினர் அதற்கு உடன்படாமையாலும் அவரை ஓர் அரசியல் சர்ச்சைக்குள் இழுக்கப்படுவதையும் விரும்பவில்லை.
இதனால், பார்வதி அம்மாள்,  அவர் பிறந்த ஊரான வல்வெட்டித்துறைக்குச் அழைத்து செல்லப்பட்டார்.    அங்கு அவரின் உடல் நிலை மோசமடைந்ததையடுத்து அவர் யாழ்ப்பாணம் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.  
அங்கு அவருக்கு தீவிரச் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சற்று உடல் நலம் தேறிய அவர் மீண்டும் பிறந்த வல்வெட்டித்துறை மருத்துவமனைக்கே மாற்றப்பட்டார்.  அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டுவந்தது. 

கடந்த சில வாரங்களாக அவர் சுய நினைவை இழந்து அவதியுற்றார்.   இந்நிலையில்   வல்வெட்டித்துறை மருத்துவமனையில் இன்று காலமானார்.
ஈழத்தாயின் பூவுடல் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை அளவில் ஈழமக்களின் அஞ்சலிக்குப்பின்னர் விதைக்கப்படலாம் என தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். 
ஈழத் தமிழினத்தை அடிமைத் தளையிலிருந்து மீட்டெடுக்கும் போராட்டத்தை முன்னெடுத்த எமது தலைவரைப் பெற்றெடுத்து வளர்த்து ஆளாக்கிய அத்தாயை உலகெங்கும் வாழும் தமிழ் மக்கள் அனைவரும் நினைவுகூர்ந்து தமது அஞ்சலியைச் செலுத்துமாறு வேண்டிக் கொள்கின்றோம்.
பிந்திய செய்தி.
யாழ் வல்வெட்டிதுறையில் மருத்துவமனையில்  ஈழத்தின் அன்னையின் பூதவுடல் வைக்கப்பட்டுள்ளது அங்கே எங்கள் ஈழத்தின் அன்னையின் பூதவுடலுக்கு ஆயிரக்கணக்கான மக்கள் அணிதிரண்டு அஞ்சலி செலுத்தி வருகிறார்கள் இதனை தடுப்பதற்கு அங்கு பல இராணுவத்தினரும் பொலிசாரும் குவிக்கப்பட்டுள்ளதாக அங்கு அஞ்சலி செலுத்தும் மக்கள் தெரிவித்துள்ளார்கள்.








இத்தளத்தின் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற தங்கள் மின்னஞ்சல் முகவரி கீழே பதிவு செய்யவும்

Image Hosted by ImageShack.us