ஈழம்

ஈழம்

ஞாயிறு, 6 மார்ச், 2011

தமிழீழ மக்களுக்கு முகம் தெரியாத ஒரு கரும்புலி வீரனின் மடல்.

அன்பான மக்களே! வெற்றி பெற்று வாழ போருக்குத் தயாராகுங்கள் நம்பிக்கையுடன் வெடிக்கின்றேன்.

அன்புக்கினிய எம் தாய்நாட்டு உறவுகளே வணக்கம்!
எங்கள் மக்களின் துன்பம் கண்டு துவண்டு கரும்புலியான எனது உணவுர்வுகளை உங்களுடன் பகிர்ந்துகொள்ள ஆசைப்படுகின்றேன். அன்பானவர்களே! உங்களின் வாழ்விற்காக, இருப்பிற்காக எனது உயிரைக் கொடையாகக் கொடுப்பதில் நான் மகிழ்ச்சியடைகின்றேன். எமது இனத்தைச் சிங்கள தேசம் அழிக்கத் துடிப்பதை நினைக்கும் போதுதான் இன்னும், இன்னும் பல பிறப்பெடுத்து எமது இனத்தின் விடிவிற்காக கரும்புலியாகப் போகத் துடிக்கின்றேன்.

அன்பான எமது மக்களே! நாம் சுதந்திரம் பெற்றே தீரவேண்டும் என்பதை இப்போது சிங்களவன் செய்யும் கொடுமைகளிலிருந்து புரிந்து கொள்ள முடிகின்றதல்வா? எங்களின் உறவுகளும், எங்களின் சொத்துக்களும் எங்கள் கண்முன்னாலேயே சிங்களவனால் அழிக்கப்படுவதைப் பார்த்துக்கொண்டிருக்க வேண்டுமா? சமாதானம்; பேசி அரசியல்தீர்வு தருவதாக நாடகம் ஆடி இப்போது அடிமையிலும் அடிமையாக்கி எமது இனத்தை அழிக்கத் துடிக்கின்றான் மகிந்த. இதனைச் சும்மா விடுவதா? இத்தனை ஆண்டு காலம் இரத்தம் சிந்தி, உயிர் விலைகொடுத்து போராடிய எம் தோழர்கள் காத்த தேசத்தை அழியவிடுவதா? ஒன்று மறியா பாலகரையும், அப்பாவிகளையும் கொல்லும் சிங்களவனைச் சும்மா விடுவதா? கொலைக்கு மேல் கொலைசெய்து எமது இனத்தை அடிமைகளாக்க நினைக்கும் சிங்களவனை நாம் சும்மா விடுவதா? சிந்தித்துப் பாருங்கள்.

வீதிக்கு, வீதி நாய்களைப்போல் சிங்களவன் ஏவும் செல்லுக்கு செத்துமடிகிறோமே? ஏன் தமிழினமே? குட்டை நாயையையும் வீட்டிற்குள் பூட்டி அடித்தல் திருப்பிக் கடிக்கவரும். ஆகவே, புலியினத்தை சுற்றிவளைத்துத் தாக்க நாம் சும்மா விடுவதா?

அன்பானவர்களே ஹிட்லர் எப்படி யூத இனத்தை அழித்தான் என்பது தெரியும்தானே? அதுதான் இன்று எம் கண்முன் நடக்கின்றது. மக்கள் அதிகம் வாழும் இடங்களை வண்டுமூலம் படம் எடுத்து அந்த இடங்கள் மீது செல்லடித்து மக்களைத் தொகை தொகையாக, குடும்பம் குடும்பமாக கொன்றொழித்து மகிழ்கின்றான் சிங்களவன். இன்னுமா எமக்கு ரோசம் வரவில்லை? இப்படியே அவன் அழிக்க, அழிக்க நாம் தொலைந்து போக வேண்டுமா?

சிந்தியுங்கள் மக்களே.

எனது அன்பான அண்ணன் மாரே, தம்பிமாரே, எங்கள் அக்காமாரே, தங்கைமாரே வேறுவொருவர் திரும்பிப் பார்த்தலே நெருப்பாகிவிடுவதுதான் எங்கள் பழக்கம். நாளை சிங்களவன் எம் தேசத்திற்குள் புகுந்து அன்பிற்குரிய அக்காவையும், பாசத்திற்குரிய தங்கையையும் சிதைக்கும்போது எம்மால் என்ன செய்யமுடியும? சாவு என்றோ ஒரு நாள் எமக்குச் சொந்தமானதுதான். வேண்டுமானால், இன்றே வரட்டும். இதன் மூலம் எமது இனம் விடுதலை பெறட்டும்.

எமது அக்காவும், தங்கையும் நிம்மதியாக வாழட்டும். அக்கா, தங்கை சிதைக்கப்படும்போது ஐயோ நான் கரும்புலியாய் போயாவது எனது அக்காவைக் காப்பாற்றியிருக்கலாம் என வேதனைப்படுவீர்கள். எனவே, நீங்கள் முடிவெடுங்கள். உங்கள் அக்காவிற்கு மட்டுமல்ல, எமது இனத்திற்கு நடக்கப்போவது இதுதான். இதிலிருந்து விடுதலை பெற அமைதியாக சிந்தித்து ஆழமான முடிவை எடுங்கள்.

அன்பான அக்காமாரே, தங்கைமாரே இன்று நீங்கள் முடிவெடுங்கள்.

முடிவெடுக்கத்தவறினால், நாளை வாழ்விழந்து, வாழ்க்கை வெறுத்து தற்கொலை நிலைதான் வரும், கடைசி மட்டும் பார்ப்போம் என்றிருந்துவிடாதீர்கள். அது உங்கள் வாழ்க்கையில் கடைசியாக இருந்துவிடும். வெள்ளம் வரும் முன் அணை கட்டுவதுதான் புத்திசாலித்தனம். குண்டுச் சத்தத்திற்குப் பயந்து போர் செய்யாமல் இருந்து நாளை வேதனைப்படப் போகின்றீர்களா? அல்லது இன்றே செய்யப்போகின்றீர்களா?

இராணுவ பூதம் என்ன செய்யப்போகின்றதென்று உங்களுக்குத் தெரியும். அக்காமாரே, தங்கைமாரே வெடிமருந்தைக் கட்டியணைத்து முத்தமிடும்; நான் உங்களிடம் பேசுகின்றேன். நாளை வெடிக்கும்வரை எமது விபரங்கள் மௌனமாகவே இருக்கும். அதன்பின் என் உணர்வுகள் உங்களைத் தாக்கும். என்னைக் கரும்புலியாக்கிய பெருமை சிங்களவன் மகிந்தவிற்கே சாரும். எனக்கும் வாழவேண்டும் என்ற ஆவல் உண்டு. ஆனால், இந்தக் கொடுமைகளையெல்லாம் பார்த்துக்கொண்டு இதற்கு ஒரு முடிவுகட்டாமல் எப்படி வாழமுடியும்?

எமது அன்பான அம்மாமாரே, அப்பாமாரே இன்றுள்ள நெருக்கடிக்கு விரைவாக முடிவெடுக்கவேண்டும். உங்கள் பிள்ளைகளை நீங்கள் உங்களிடம் வைத்திருப்பதால் பாதுகாக்கமாட்டீர்கள். மாறாக, உங்கள் கண்முன் சிங்களக் காடையார்களால் கொடுமைப்படுத்தப்படுவதைத்தான் பார்க்கப்போன்றீர்கள். உங்கள் பிள்ளைகள் களத்திற்குச் சென்றால் இறந்து விடுவார்கள் என்று எண்ணாதீர்கள். அவர்களின் வீரத்தால் நீங்களும், உங்கள் உறவுகளும், பிள்ளைகளும், பச்சைப் பாலகர்களும் மகிழ்வார்கள். நான் அரசியல் பேசுபவன் அல்ல. நான் ஒரு கரும்புலி, எமது அம்மா என்னை நினைத்து எங்கே எனது பிள்ளை. எங்கே சென்கின்றானோ என வேதனைப்படுவது எனக்குத் தெரியும். ஆனால், எனது தங்கை, அக்கா, அண்ணன் குடும்பம், மாமா குடும்பம் எனது உறவுகள் நிம்மதியாக வாழ வழிதேடிய நான் கரும்புலியானேன்.

எனது அம்மாவிற்கு அன்பு மடலில் எல்லாவற்றையும் எழுதியுள்ளேன். அவர் புரிந்துகொள்வர். என் வரலாற்றை அவரே எடுத்துச் சொல்வார் என்பது மட்டும் உறுதி. அன்பான இளைஞர்களே, யுவதிகளே இன்று நீங்கள் அனைவரும் உங்கள் சுயநலனைவிட்டு தலைவன் வழியில் இணையுங்கள். எம்மில் சிலர் இறந்தாலும் எமது இனம் நிம்மதியாக வாழ வழி கிடைக்கும்.

அம்மாமாரே. உங்கள் பிள்ளைகளை எதிரியால் கொடுமைப்படுத்தப்படுவதை, கொல்லப்படுவதைப் பார்க்கப் போகின்றீர்களா? அல்லது விடுதலைக்காகப் போராட அனுப்பப்போகின்றீர்களா? இதனை நான் இங்கிருந்து பார்க்கமாட் டேன். மூத்த தளபதி கிட்டு அண்ணையுடன் வானத்திலிருந்து பார்ப்பேன். அன்பான உறவுகளே எமக்கான நாள் நெங்குகின்றது. ஆனால், மக்கள் பல இடப்பெயர்வுகளையும், துயரங்களையும் சந்திக்கின்றார்களே தவிர இந்த நிலைக்கு தள்ளிய எதிரியை நோக்கிப் போர் செய்யத்தயாராக இல்லை என்பதை நினைத்தே நான் வேதனைப்படுகின்றேன்.

அன்பான பெரியவர்களே, சான்றோர்களே, மூத்தவர்களே நாம் விடுதலை பெறுவதற்கு உங்கள் பங்களிப்பே மிக முக்கியமானது. எமது போராட்டத்தில் பல்வேறு வடிவங்களை எமது போராளிகள் சந்தித்துள்ளனர். இதற்கு எல்லாம் அண்ணன் திலீபன் செய்த தியாகமே மேலானது. அவர் சொன்னார். "மக்கள் புரட்சி வெடிக்கும். அப்போதுதான் உண்மையான சுதந்திரம் கிடைக்குமென்று." அது மிக முக்கியமானது. உண்மையானது. வியட்னாமில் மக்கள் எப்படிப் போராடினார்கள். தெரியும் தானே. எனவே, பெரியவர்களாகிய நீங்கள் முன்னுக்கு வாருங்கள். ஆசிரியர்கள், பெரியவர்கள் தலைமையில் ஒன்றுகூடுங்கள். மக்களுக்குள் சென்று போராடவலுவுள்ள அனைவரையும் போருக்குத் தயார்செய்யுங்கள். எனவே, ஒருவர் தலைமை தாங்குங்கள். மக்கள் பணி செய்யுங்கள். போர்ப் பணிக்குத் தேவையான பின்பணி செய்யுங்கள். எமது சுதந்திரத்தை நாம் போராடியே பெறவேண்டும் என்ற கருத்தை மிக ஆழமாக மக்களுக்குள் விதையுங்கள்.

இன்றுள்ள நெருக்கடிக்கு நீங்கள் செய்யும் பணி மிகமிக முக்கியமானதும், இன்றியமையாவதாகவும் இருக்கும். பூனைக்கு மணி காட்டுவது யார் என்று இருக்கலாம். புலிகளின் குரலின் செயலை அதாவது, அவர்களுடைய குரலைக் கேளுங்கள். உங்களுக்கு எல்லாம் விளங்கும். விடுதலை பெற எமக்கான வழி ஒன்றுதான் இருக்கின்றது. அது போராடுவதுதான். போரில் நாம் வெற்றிபெற வேண்டுமானால், போர் புரிபவர்களின் பின்னிருந்து, அவர்களுக்கு நம்பிக்கையூட்ட வேண்டும். மாறாக, நாம் வாழ விரும்புவோமானால், நாளை சிங்களவன் என்ன செய்வான் நீங்களே புரிந்து விரைவாகச் செயற்படுங்கள்.

அன்பான உறவுகளே, உங்களிடம் மன்றாடிக்கேட்பது இன்று இடம்பெயரும் மக்களுக்கு முடிந்தளவு உதவி செய்யுங் கள். அனைவரும் அன்பாக இருங்கள். எனது மக்களிடம் ஒன்றைமட்டும் கேட்கின்றேன். எனது உயிரை எந்தவேளையிலும் என் தாய் நாட்டிற்குத் தர நான் தயார். எமது தலைவரை நம்புங்கள். நிச்சயமாக எமக்கு சுதந்திரம் பெற்றுத் தருவார். நான் பெரிது நீ பெரிது என்பதை விட்டு அனைவரும் வெற்றி பெற்று வாழவேண்டும் என்ற முழக்கத்துடன் போருக்குத் தயாராகுங்கள்.

அன்பான  மக்களின் போருக்கான முழக்கம் கேட்கும் என்ற நம்பிக்கையுடன் வெடிக்கின்றேன்.


முகம் தெரியாத கரும்புலி வீரனின் மடல்.


Image Hosted by ImageShack.us




இத்தளத்தின் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற தங்கள் மின்னஞ்சல் முகவரி கீழே பதிவு செய்யவும்

Image Hosted by ImageShack.us