ஈழம்

ஈழம்

சனி, 1 அக்டோபர், 2011

நாம் அணிவகுத்துள்ளோம் - விடுதலை பேரொளி தலைவர் பிரபாகரன்.


அணிவகுத்துள்ளோம்...
நாம் தமிழ் ஈழப் படைவீரர்கள்!
நாம் அணிவகுத்துள்ளோம்
இழந்த எமது நாட்டை மீட்க
எதிரி எமது நாட்டை
வஞ்சகமாக அபகரித்துவிட்டான்!
அதைக்கண்டு நாம் அஞ்சவில்லை!
புயலெனச் சீறி
இழந்த நாட்டை மீட்க.
நாம் அணிவகுத்துள்ளோம்...
நாம் தமிழ் ஈழப் படைவீரர்கள்!
எமது படையணி கடக்க வேண்டியது
நெருப்பாறென்பது எமக்குத் தெரியும்!
ஆனால்....
அதைத் தாங்கக் கூடிய
மக்கள் ஆதரவென்னும்
கவசம் எம்மிடம் உண்டு!
எதிரியின் ஆயுதமோ பலம் பொருந்தியது!
எமது
ஆத்ம பலமோ அதைவிட வலிமைவாய்ந்தது!
எதிரியின் குண்டுகள் வெடிக்கும்...
ஆனால்
எமது விடுதலை நெஞ்சங்கள்
எரிமலையென வெடிக்கும் சத்தத்தில்
அதன் சத்தம் அமுங்கிவிடும்!
நாம் அணிவகுத்துள்ளோம்...
நாம் தமிழ் ஈழப் படைவீரர்கள்!
எமது அணிவகுப்பு
எமது தமிழ்ஈழ மக்களிடையே
அணிவகுத்துச் செல்கிறது!
நாம் செல்லும் இடமெல்லாம்...
எமது எதிரிகள் அஞ்சி ஓடுகிறார்கள்!
மக்களிடம் உள்ள
பிரதேசம் சாதி
மதமென்னும் பேய்களும்
அலறி ஓடுகின்றன...
எமது படையணி விரைகிறது...
எமது தேசத்தை மீட்க!
நாம் செல்லும் இடமெல்லாம்
காடுகள் கழனிகள் ஆகின்றன!
வெட்டிப் பேச்சு வீரர்கள்
மிரண்டோடுகின்றனர்...!
உழைப்போர் முகங்களில்
உவகை தெரிகிறது.
ஏழைகள் முகங்களில்
புன்னகை உதயமாகிறது.

(தமிழீழ தேசியத் தலைவர் திரு.வே.பிரபாகரன்
அவர்களால் 1981-ஆம் ஆண்டில் எழுதப்பட்ட கவிதை)

போர் உலகில் புலித்தலைவர் புகழ் ஒன்றே நிலைக்கும் சிறு பிள்ளைகளும் பிரபாகரன் பெயர் எழுதி படிக்கும்.....


Image Hosted by ImageShack.us

இத்தளத்தின் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற தங்கள் மின்னஞ்சல் முகவரி கீழே பதிவு செய்யவும்

Image Hosted by ImageShack.us