ஈழம்

ஈழம்

ஞாயிறு, 13 நவம்பர், 2011

மாவீரர் துயிலும் இல்லம்.


களமாடிக் காவியமானவர்கள்
கண்ணுறங்கும் இடம் இது

விடுதலை வேட்கை நெஞ்சிற் சுமந்து
வித்தாகியவர்கள் விதைக்கப்பட்ட புண்ணிய பூமி இது
தன்மானத்தைக் காக்க
தம்மையே அர்ப்பணித்வர்கள் கூடிய தேசம் இது

இரவு பகல் பாராது போராடி
இன்னுயிரை ஈந்த இதயத் தெய்வங்களின் இருப்பிடம் இது

காவலரணில் கண் விழித்துக் காத்தவர்கள்.
கண் மூடித் தூங்கும் இடம் இது

இனவெறிச் சிங்களவரை எதிர்த்து நின்று
இரத்தம் சிந்தியவர்கள்  இருக்கும் இடம் இது

தமிழீழத் தாகமுடையவர்கள்
தம்மை மறந்து துயிலும் இல்லம் இது
இவை கல்லறைகள் அல்ல
ஈழ விடுதலைத் தெய்வங்கள் நிறைந்த கோயில்கள்
ஈனச் சிங்களவர் இவற்றை அழித்தாலும்- எம்
மனச் சிறகுகளில் உறைந்திருக்கும் சுவடுகள் – இவை

கண்ணில்லா உலக நாடுகளே
காவல் தெய்வங்கள் உறங்கும் கோயிலை அழிக்கலாமா?
சிங்களரின் வெறியாட்டத்தைப் பார்த்து
சிந்திக்காமல் இருக்கும் நாடுகளே இது நியாயமா?

தர்மம் வெல்லும் ஓர் நாள் – அன்று
தமிழீழம் மலரும் -அவ்வேளை

கொடிய சிங்களவரின்
கொலை வெறித் தாண்டவம் அகலும்

மாவீர் கனவுகள் நனவாகும் – வீர
மறவர்கள் மறு உயிர் கொள்வார்…

Image Hosted by ImageShack.us

க. தமிழவன்

இத்தளத்தின் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற தங்கள் மின்னஞ்சல் முகவரி கீழே பதிவு செய்யவும்

Image Hosted by ImageShack.us