ஈழம்

ஈழம்

செவ்வாய், 2 அக்டோபர், 2012

லெப்.கேணல் ஜீவன், லெப்.கேணல் பிரதீபராஜ் உட்பட பல மாவீரர்களின் நினைவு நாள் இன்று.

சூரியக்கதிர் நடவடிக்கைக்கு முன்னேற்பாட்டு நடவடிக்கையாக சிறிலங்கா படையினரால் வலிகாமம் கிழக்குப் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட இடிமுழக்கம் நடவடிக்கைக்கு எதிரான சமரில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் ஜீவன்(அசிம்) உட்பட்ட 170 வரையான மாவீரர்களின் வீர வணக்க நினைவு நாள் இன்றாகும்.




மற்றும் இதே நாள் 03.10.1998 அன்று முல்லைத்தீவு மாவட்டம் ஒலுமடு பகுதியில் ஸ்ரீலங்கா படையினர் நடத்திய எறிகணை தாக்குதலின் போது வீரச்சாவடைந்த லெப்.கேணல் பிரதீபராஜ் அவர்களின் வீர வணக்க நினைவு நாளும் இன்றாகும்.

தமிழீழ தாயக விடுதலைக்காய் தமது இன்னுயிரை ஈகம் செய்த இந்த வீரமறவர்களிற்கு எங்கள் வீரவணக்கங்கள். இதே நாளில் வீரச்சாவைத் தழுவிய ஏனைய மாவீரர்களிற்கும் எங்கள் வீரவணக்கங்கள்.

தமிழீழம் கிடைக்கும் வரை உங்களை நிச்சயம் தொடர்வோம்.

Image Hosted by ImageShack.us

பேஸ் புக்கில் உங்கள் விருப்பத்தை தெரிவித்து எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள் உறவுகளே.

இத்தளத்தின் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற தங்கள் மின்னஞ்சல் முகவரி கீழே பதிவு செய்யவும்

Image Hosted by ImageShack.us