ஈழம்

ஈழம்

செவ்வாய், 8 ஜனவரி, 2013

"தமிழீழ காவல்துறை" தமிழர்களின் தலை நிமிர்வுக்கு இன்னொரு சாட்சி...!!!!

தமிழீழ காவல்துறையானது தமிழீழ தேசிய தலைவரின் தூர நோக்குடைய பார்வைக்கு மிக சிறந்த எடுத்து காட்டாகும். நாட்டின் எல்லையில் எதிரிகளை அழித்து நாட்டினை பாதுகாக்கும் புலிகள் போல், நாட்டிற்குள் இருக்கும் சமுக விரோதிகளை அழித்து தமிழீழ மக்களை பாதுகாக்க வேண்டும் என்ற தேசிய தலைவரின் சிந்தனைக்கு அமைவாக தோற்றம் பெற்றதே தமிழீழ காவல்துறை ஆகும்.

உலகில் எல்லா நாடுகளும் தமக்கான சுதந்திரத்தை பெற்றெடுத்த பின்னரே நாட்டின் உள் கட்டமைப்பான காவல்துறை, நீதித்துறை போன்ற உள் கட்டமைப்புகளில் கவனம் செலுத்துவர். ஆனால், ஒரு பக்கம் சுதந்திரத்துக்காக போராடிக்கொண்டே மறு பக்கம் மக்களின் உள்கட்டமைப்புகளில் கவனம் செலுத்தி அவற்றை திறம்பட நடத்தி சென்ற ஒரே நாடு என்றால் அது எம் தமிழீழமாகத்தான் இருக்க முடியும். இவற்றை எல்லாம் திறம்பட வழி நடத்திய ஒரே தலைவர் என்றால் அது எம் தேசிய தலைவர் பிரபாகரனாக மட்டுமே இருக்க முடியும்.

போலீஸ் என்றால் எல்லாருக்கும் ஏற்படும் இயல்பான பய உணர்வு என்பது துளியும் இல்லாமல் மக்களோடு மக்களாக கலந்து மக்களுக்கு சேவை செய்வதையே இலக்காக கொண்டு உலகிலேயே மிக சிறந்த ஒழுக்கமான, நேர்மையான, திறமையான காவல்துறை என்றால் அது தமிழீழ காவல்துறையே ஆகும். இலஞ்சம் என்ற ஒன்று முற்றாக இல்லாமல் அழிக்கபட்ட ஒரு காவல்த்துறை என்றால், அது நமது தமிழீழ காவல்த்துறையாக ஆகத்தான் இருக்க முடியும்.

தமிழீழ காவல்துறையின் நடவடிக்கைகளின் கீழ் தமிழீழத்தில் பெண்கள் நள்ளிரவு 12 மணிக்கு கூட தைரியமாக வெளியில் சென்று பாதுகாப்பாக வீடு வர கூடிய ஒரு சூழல் காணப்பட்டது. இதை ஈழத்தில் இருந்த அனைத்து மக்களும் உணர்ந்திருப்ப்பர்கள். கொலை கொள்ளை கற்பழிப்பு என்று அந்த குற்ற செயல்களும் இல்லாமல் தமிழீழத்தினை சொர்க்க பூமியாக மாற்றிய பெருமை தமிழீழ காவல்துறையினரையே சாரும். இதை தமிழீத்தில் புலிகளின் ஆட்சி காலத்தில் வாழ்ந்த யாரை கேட்டாலும் தெரிந்து கொள்ளலாம்.

இன்று வெளிவரும் பத்திரிகைகளை எடுத்து கொண்டால் பாதிக்கும் மேல் கொலை, கொலை, கற்பழிப்பு, கள்ளகாதல் என்று குற்றசெயல் பற்றியே வருகின்றன. தமிழீழத்தின் இவை ஒன்றும் இல்லை என்று சொல்ல வரவில்லை, இருக்கும் ஆனால் மிக அரிதாகவே நடக்கும். தமிழீழத்தில் ஒரு வருடத்தில் நடக்கும் குற்ற செயல்கள் எல்லாம் இங்கு ஒரு வாரத்தில் நடக்கும் என்பதே உண்மையாகும். இந்தளவுக்கு தமிழீழத்தை மாற்றிய பெருமை இவர்களையே சாரும்

மற்ற நாடுகளை போல் ஒரு வழக்கை ஒன்பது வருடங்கள் வைத்து இழுத்தடிக்காமல் துரிதமாக வழக்கை விசாரித்து நீதி வழங்கி தமிழீழத்தில் சட்ட ஒழுங்கை திறம்பட காப்பாற்றி வந்தனர். காவல்துறை என்றால் இப்படிதான் இருக்க வேண்டும் என்று மக்கள் பேசும் படியாக பொது மக்களின் நண்பனாக இருந்து பொது மக்களின் துன்பங்களை தீர்த்து நீதியை நிலை நாடிய தமிழீழ காவல்துறையினரின் செயற்பாடுகள் வெகு விரைவில் மீண்டும் ஈழத்தில் ஆரம்பாமாகும் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை.


நன்றி...
ஈழ மைந்தன்

பேஸ் புக்கில் உங்கள் விருப்பத்தை தெரிவித்து எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள் உறவுகளே.

இத்தளத்தின் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற தங்கள் மின்னஞ்சல் முகவரி கீழே பதிவு செய்யவும்

Image Hosted by ImageShack.us