ஈழம்

ஈழம்

புதன், 25 ஜூன், 2014

தமிழீழ தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் ஊடக சந்திப்பில்.

1956 இல் இருந்தே தொடங்கி 1983 இல் உச்சம்பெற்ற இன அழிப்பு கலகங்களுக்கு ஊடாக வழந்தவர் என்கின்ற அடிப்படையிலும் இன்றைய சர்வதேச அரசியல் போக்கின் அடிப்படையிலும் தங்கள் அவலங்களினை உலகின் கண்முன் நிறுத்தி அனுதாபத்தினை அங்கீகாரத்தினை பெற்று தம்மீதான கொடிய அடக்கு முறைகளை தடுத்து நிறுத்த முடியாமல் துயருறும் பாலஸ்தீன மக்கள் போன்றோரினை கருத்தில் கொண்டும் உங்கள் விடையை விளக்குமாறு தேசியத்தலைவரிடம் கேட்டபொழுது.


நாங்கள் எப்பொழுதுமே ஒரு பரிதாபத்துக்குரிய மக்களாய் அலைவதை நான் எப்பொழுதுமே வரவேற்பதில்லை ஏனென்றால் பரிதாபத்துக்குரிய மக்களாய் நாங்கள் அலைவதால் எல்லோருடைய பரிதாபத்தை சம்பாதித்துக்கொள்வோமே எனில் எங்களுடைய பிரச்சனைகளை நாங்கள் தீர்க்கபோவதில்லை எப்பொழுதும் எங்களுடைய பிரச்சனையை நாங்கள் எங்களுடைய உரிமை போராட்டத்தின் மூலம் தான் நாங்கள் தீர்க்க முடியும்.

 நாங்கள் அடிக்க ஒழும்பி ஓடிக்கொண்டு இருந்தோமே எண்டால் எங்களுக்கு அடிப்பவர்கள் துரத்தி துரத்தி அடித்துக்கொண்டே இருப்பார்கள் திரும்ப நாங்கள் அடிக்கிறதன் மூலம் தான் நாங்கள் எப்பொழுதும் எங்களை பரிதாபத்துக்குரிய நிலையில் இருந்து எங்களை நீக்கி எடுக்கலாமே ஒழிய மற்றவர்களுடைய இரக்கபடுதலில் இல்லை இன்று இந்த உலகத்தை பார்த்தால் தெரியும் ''வலியவர்கள் வாழ்வார்கள்'' என்ற தத்துவம் தான் இந்த உலகத்தில் உள்ளது எனவே இந்த உலகத்தில் இண்டைக்கும் எத்தினையோ மக்கள் இன குளுக்கள் எல்லாம் பாதிக்கப்பட்டு வெளியே தெரியவரமுடியாமல் இருக்கிறார்கள்

அதற்க்கு காரணம் அவர்கள் தனியே பரிதாபத்துக்குரிய மக்களாகவே இருக்கிறார்கள் அதேநேரம் அவர்கள் அவர்களுடைய எதிர்ப்பை காட்டுவார்களாக இருந்தால் நிச்சயமாக அவர்கள் எதிரிகளால கூட மதிக்கபடுவர் ஏனென்றால் எதிரிகளுக்கு கூட எப்பவுமே ஒரு பலவீனமான பகுதியை பலமானவர்கள் அழித்து தங்களுடைய வளர்ச்சியைத்தான் கொண்டு வருவார்கள் எனவே எப்பவுமே நாங்கள் எங்களுடைய பலவீனமான பகுதியை வைத்துகொண்டு உலகம் எங்களை பார்த்து எங்கள் பக்கம் திரும்ப வேணும் என்பது தவறு நாங்கள் இங்க பலவீனமாக இருந்த காலத்தில எந்த உலகமும் எங்களிட்ட வரேல்ல உங்களுக்கு தெரியும் நாங்கள் இப்ப பலமாக இருக்கிற காரனத்தினால தான் உலகத்தினர கவனம் எங்கள் பக்கம் திரும்பி இருக்கு அதாவது இப்பகூட உலகத்தினர் கவனம் எப்படி திரும்பி இருக்கென்றால் இலங்கையுடைய அதாவது நாங்கள் பலமாக இருக்கின்ற படியால் இலங்கையுடைய ஒருமைப்பாடு எங்க சிதைந்து விடுமோ அல்லது இலங்கையில் இன்னொரு நாடு உருவாகிவிடுமோ என்கின்ற காரணத்தினால் இதை எப்படி தீர்க்கலாம் என வந்திருக்கிறார்களே ஒழிய எங்களுடைய பிரச்சனையில சரி எங்களுடைய கோரிக்கை சரி இவர்கள் பிரிந்துபோவது சரி எனவே இவர்களுக்கு உதவ வேணும் என்று சொல்லி எவரும் இங்க வரவில்லை இப்பவே கூட இலங்கைக்காகதான் அதாவது இலங்கையினுடைய ஒருமை பாட்டுக்காகத்தான் வந்து பேசுகிறார்களே ஒழிய எங்களுடைய பரிதாபத்திற்க்காக ஒருத்தரும் வரவில்லை இங்கு இந்த ஆயுதப் போராட்டத்தினுடைய வலிமை இல்லாமல் இருந்திருந்தால் இங்கு யாருமே திரும்பி பாத்திருக்க மாட்டார்கள் இங்க பிரச்சனைகள் ஒரு அடக்குமுறயாலையே  தீர்க்கபட்டிருக்கும்.

உலகம் போற்றும் ஒரு வீரத்தலைவன் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன்.

இத்தளத்தின் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற தங்கள் மின்னஞ்சல் முகவரி கீழே பதிவு செய்யவும்

Image Hosted by ImageShack.us