ஈழம்

ஈழம்

சனி, 21 ஜூன், 2014

இந்திய படையினருனான ஏற்பட்ட மோதலில் காயம்பட்ட முதல் போராளி யார். திரு.பொட்டமான் எப்போது காயப்பட்டார்.

தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் இந்திய படையினருக்கும் முதன் முதலாக யாழ் பல்கலைக்கழகத்தின் அருகாமையில்  வைத்தே போர் வெடித்தது. 

விடுதலை புலிகள் மீது தாக்குதல்களை மேற்கொண்டு பராசூட் மூலம் வந்திறங்கிய இந்திய படையினர் மீது விடுதலைப் புலிகள் மேற்கொண்ட எதிர் தாக்குதல்களால் பல இந்திய படையினர் கொல்லப்பட்டனர். 


 யாழ் பல்கலைகழகத்தின் அருகாமையில் விமானம் மூலம் தரையிறங்கிய  இந்திய படையினர் மீது விடுதலைப்புலிகள் நடாத்திய மூர்க்கத்தனமான தாக்குதல்களை எதிர் கொள்ள முடியாமல் திணறிய இந்திய படையினர் தங்கள் தரையிறக்கத்தை கைவிட்டு பின் வாங்கிய நிலையில் தங்கள் இருப்பிடங்களிற்கு சென்றார்கள்.

விமானம் மூலமும் விடுதலைப் புலிகளுக்கு எதிராக தங்கள் தாக்குதல்களை தொடுத்த இந்திய படையினர் விமானத்தின் வாயிலாகவும் இந்திய இராணுவத்தை தரையிறக்க முற்ப்பட்ட போதும் புலிகளின் தாக்குதல்களை சமாளிக்க முடியாமல் விமானங்கள் எல்லாமே திரும்பி சென்றன.

யாழ்பல்கலைகழகத்தின் அருகாமையில் நடந்த இந்திய படையினருக்கு எதிரான தாக்குதலில் விடுதலைப்புலிகளின் புலனாய்வு துறை பொறுப்பாளர் திருபொட்டமான் அவர்கள் முதன் முதலாக காயப்பட்டார்.

காயப்பட்ட பொட்டமான் அவர்களை யாழ் வைத்தியசாலையில் அனுமதித்து சிகிச்சை பெற்று வருவதை மோப்பம் பிடித்த இந்திய படையினர் யாழ் வைத்தியசாலை நோக்கி தங்கள் தாக்குதல்களை தொடர்ந்தார்கள். ஒரு பக்கம் யாழ் நகரத்தை நோக்கி வந்த இந்திய படையினரை விடுதலைப் புலிகளின் அணி ஒன்று தடுத்தி நிறுத்தி சண்டையிட்டு கொண்டிருந்தார்கள்.

திரு.பொட்டமான் அவர்களை  கைது செய்யும் நோக்கோடு தாக்குதல்களை மேற்கொண்டு வந்த இந்திய படையினரை இன்னொரு புலிகளின் அணி தடுத்து நிறுத்தி சண்டையிட்டு வந்த வேளையில் வேறு சில போராளிகளால் பொட்டமான் அவர்களை தமிழீழ தேசிய தலைவரின் ஊரான வல்வெட்டுத்துறை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
யாழ் வைத்தியசாலை நோக்கி பொட்டமானை தேடி வந்த  இந்திய படையினர் அங்கு பொட்டு அம்மான் கிடைக்காததை நினைத்து மக்கள் மீது தாக்குதலை தொடுத்து வெக்கி தலை குனிந்தே சென்றார்கள். ஹிந்திய மிருகங்கள்.

கொஞ்ச நாட்கள் வல்வெட்டிதுறை மருத்துவமனையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வந்த பொட்டமான் அவர்கள் பின்பு இந்திய படைகளால் ஆபத்து வருமென எண்ணி போராளிகளால் வன்னி கொண்டு செல்லப்பட்டார்.

தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் இந்திய படையினருக்கும் நடந்த மோதலில் முதன் முதலாக திரு.பொட்டமான் அவர்களே காயப்பட்டிருந்தார்.

புலிகளின் இடங்களை ஓரிரு நாட்களில் கைப்பற்றி விடுவோம் என எண்ணிய இந்திய கூர்க்கா  படையினர் எல்லோருக்குமே அங்கே அதிர்ச்சி தான் காத்திருந்தது. 

புலி வேகத்தில் நகருவோம் என நினைத்த இந்திய கூர்க்கா படையினர் புலிகளின் தாக்குதல்களை எதிர்கொள்ள முடியாமல் ஆமை வேகத்திலையே பல இழப்புகளுடன் நகர்ந்து சென்றார்கள்.
இதோ,இதோ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை பிடித்து விடுவோம் என சவால் விட்ட இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி உட்பட இந்திய இராணுவ தளபதிகள் எல்லோருமே இறுதியில் ஏமாற்றம் அடைந்தார்கள்.

தலைவனின் நிழலையோ தலைவனின் இருப்பிடத்தை நோக்கியோ அவர்களால் செல்ல முடியவில்லை அவ்வளவுக்கு புலிகளின் எதிர்ப்பு சமர்களை இந்திய கூர்க்கா படையினரால் சமாளிக்க முடியவில்லை.

தலைவன் வளர்த்த புலிகள் நாங்கள்.
தமிழீழ மாணவன்

பேஸ் புக்கில் உங்கள் விருப்பத்தை தெரிவித்து எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள் உறவுகளே.

இத்தளத்தின் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற தங்கள் மின்னஞ்சல் முகவரி கீழே பதிவு செய்யவும்

Image Hosted by ImageShack.us