ஈழம்

ஈழம்

சனி, 10 செப்டம்பர், 2011

லெப். கேணல் கலையழகனின் 3ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.

லெப். கேணல், கலையழகன்
சித்திரவேல் கெங்காதரன்
தமிழீழம் (திருகோணமலை மாவட்டம்)
மண் மடியில்: 10.09.2008

தமிழீழ தாயக விடுதலைக்காகவும் எம் மக்களின் விடுதலைக்காகவும் பல களமுனைகளில் எதிரியுடன் போராடி மடிந்த லெப். கேணல், கலையழகன் (லூயின்) என்ற வீர மறவனின் 3ம் ஆண்டு  நினைவு நாள் இன்றாகும். (10.09.2011)
இதே நாளில் தமிழீழ தாயக விடுதலைக்காக போராடி வீரச்சாவடைந்த ஏனைய மாவீரர்களுக்கும் இந்த வீரமறவனுக்கும் எங்கள் வீரவணக்கத்தை தெரிவித்து கொள்கின்றோம்.

லெப். கேணல், கலையழகன்


தமிழ் எல்லை தாண்ட எத்தனித்த எமனை

முகமாலை முன்னரங்கில் நீதானே!! 
செங்களம் ஆடியவன்...

சிங்களத்தைச் சிதறடித்தாய்……   
நில் எனத் தடைபோட்டாய்.

 நிறுத்தி வேலியிட்ட எங்கள் கட்டளைத் தளபதியே - கலையழகன் !!

வீர வணக்கம்,,,,,,,,,,,,,,,,  
வீர வணக்கம்,,,,,,,,,,,,,,,, 
வீர வணக்கம்,,,,,,,,,,,,,,,,

ஈனப் படைகொண்ட கயவர் கூட்டத்தை - எல்லையில்

உடல் கிழித்துப் போர்க்களத்தில் புறமுதுகிடச் செய்தாய்

தலைவன் தத்தெடுத்த தாக்குதல் தளபதியே....................

வீர வணக்கம்,,,,,,,,,,,,,,,,  
வீர வணக்கம்,,,,,,,,,,,,,,,, 
வீர வணக்கம்,,,,,,,,,,,,,,,,

தமிழீழம் கிடைக்கும் வரை உங்களை நிச்சயம் தொடர்வோம்.

நன்றி
இப்படிக்கு சகோதரன்
சித்திரவேல் நடேசலிங்கம்

Image Hosted by ImageShack.us



இத்தளத்தின் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற தங்கள் மின்னஞ்சல் முகவரி கீழே பதிவு செய்யவும்

Image Hosted by ImageShack.us