ஈழம்

ஈழம்

வியாழன், 6 மார்ச், 2014

லெப்டினன் கேணல் ஈழவனின் வீரவணக்க நினைவு நாள்.

லெப்டினன் கேணல் ஈழவன்
தமிழீழம் (கிளிநொச்சி மாவட்டம்)
தாய் மடியில் : 20.12.1983
தாயக மடியில் : 06.03.2009

தமிழீழ தாயக விடுதலைக்காகவும் தமிழீழ மக்களின் விடிவுக்காகவும் களமாடி உயிர் நீத்த லெப்டினன் கேணல் ஈழவனின் நினைவு நாள் இன்றாகும்.

கிளிநொச்சி கணேசபுரத்தை பிறப்பிடமாக கொண்ட ஈழவன் தனது ஆரம்ப கல்வியை கிளிநொச்சி இந்து கல்லூரியில் தனது கல்வி பயணத்தை தொடர்ந்தான். கல்வியில் பெரும் ஆர்வத்தோடும் விளையாட்டில் திறமையோடும் சக மாணவர்களோடு அன்பாக இருந்தவனின் வாழ்கையில் ஓர் சிறு திருப்பம் உண்டாகியது.

போர் காரணமாக மக்கள் இடம் பெயர்வதும் சிங்கள வான் படையின் குண்டு வீச்சினால் மக்கள் துன்பப்படுவதை நாள் தோறும் கண்டு வந்த ஈழவன் காடையரின் கொடுமை பொறுக்க முடியாமல்  பொங்கி எழுந்தான்.

1999 விடுதலைப்புலிகள் அமைப்பில் இணைந்ததை அடுத்து ராத வான்காப்பு படையணியில் சிறந்து விளங்கினான்.

போராட்ட காலத்தில் தன்னுடைய திறமையினால் போராளிகளையும் பொறுப்பாளர்களின் பாரட்டையும் புகழையும் பெற்று. இறுதி கட்டத்தில் நடந்த கடும் மோதலில் கண்ணில் விழுப்புண் அடைந்து மாத்தளன் வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டார்.

மாலை நேரம் எதிரி வீசிய எறிகணைக்கு இரையானான் நம் ஈழவன் .
ஈழவன் எம்மை விட்டு பிரிந்தாலும் அவனின் கனவும் இலட்சியமும் எம்மோடுதான் வாழ்ந்துகொண்டு இருக்கிறது.



ஈழவன் கனவு நிறைவேறும் வரை ஓயோம் என்று சத்தியம் எடுத்து கொள்கின்றோம் .


தமிழீழ தாயக விடுதலைக்காகவும் தமிழீழ மக்களின் விடிவுக்காகவும் எதிரியுடன் களமாடி வீழ்ந்த லெப்டினன் கேணல் ஈழவனிற்கு எங்கள் வீர வணக்கத்தை தெரிவித்து கொள்கின்றோம். மற்றும் இதே நாள் வீரச்சாவடைந்த ஏனைய போராளிகளுக்கும் எங்கள் வீர வணக்கத்தை தெரிவித்து கொள்கின்றோம்.

தமிழீழம் கிடைக்கும்  வரை உங்களை நிச்சயம் தொடர்வோம். 

|| புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் ||

பேஸ் புக்கில் உங்கள் விருப்பத்தை தெரிவித்து எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள் உறவுகளே.

இத்தளத்தின் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற தங்கள் மின்னஞ்சல் முகவரி கீழே பதிவு செய்யவும்

Image Hosted by ImageShack.us